Wednesday, April 26, 2017

தாய்மொழி பயிலல்


தாய்மொழி பயிலல் :
 ------------------------------
செய்தி : “பிற மாநிலத்தவரும் தமிழ் படிக்க வேண்டும்!" முதல்வர்கள் கூட்டத்தில், பிரதமர் மோடி பேச்சு.
அரசியல் தவிர்த்து இதை சற்று உள்நோக்கி பார்ப்போம்.
வேலை நிமித்தமாக ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலத்திற்கு சென்று வசிப்பவர்கள் இன்றைய கால கட்டத்தில் மிகவும் அதிகம். அவர்கள், தங்களது குழந்தைகளை தங்கள் தாய் மொழியில் படிக்க வைக்க நினைத்தாலும் முடியாத சூழலே 'இந்தி'யாவில் நிலவுகிறது. தாய்மொழிக்காக பலர் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்ப நினைத்தாலும், சொந்த ஊரில் அதே போன்ற, அதே ஊதியத்தில் வேலை கிடைக்குமா என்ற அச்சம், அங்கு திரும்ப நினைப்பதை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. சொந்த மாநிலத்திலும் பெரு நகரங்களையே பணிகளுக்கு நம்பி இருப்பதாலும், சொந்த ஊருக்கும் பெரு நகரத்திற்குமான இடைவெளி மற்றும் போக்குவரத்தில் உள்ள சிக்கல் மற்றோர் காரணமாகவும் உள்ளது.
பெங்களூரை உதாரணமாக எடுத்துக்கொண்டால், பெங்களூரை ஒட்டியுள்ள சுமார் 200-300 கிமீ தொலைவில் உள்ள பெருவாரியான மக்கள் பெங்களூரையே வாழ்வாதாரமாக கொண்டு உள்ளார்கள். இது தமிழ்நாட்டிற்கு மட்டும் அல்ல.. ஆந்திர மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கும் பொருந்தும். இதே மனநிலையில் தான் சென்னையில் வாழும் பிற மாநிலத்தவரும் இருக்கக்கூடும் என கருதுகிறேன்.
மோடி அவர்களின் இந்த பேச்சு மனப்பூர்வமாக இருந்தால், மத்திய அரசு இதனை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த ஆவன செய்ய வேண்டும். மாநில அரசுகளும், மற்ற மாநில மொழிகளுக்கு மதிப்புக் கொடுத்து இதனை செயல் படுத்த முயற்சி எடுக்கலாம்.
படத்தில் இருப்பது பெங்களூரின் மைய பகுதியில் இருக்கும் அரசு தமிழ்ப் பள்ளி. இதன் பின்னால் அழகாக பொழிவுடன் இருப்பது திப்பு சுல்தான் சம்மர் பேலஸ்.
(சொந்த ஊருக்கு பக்கத்துல இருக்குன்னு பெங்களூர் வந்துட்டு, நாம படும் பாடு இருக்கே... 😥 )

மொடக்குறிச்சி கிருஷ்

27-April-2017

No comments:

குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...