Wednesday, April 26, 2017

அன்னதானம்?

காலை 11 மணி. பெங்களூரின் புறநகர் வர்த்தூர் ஏரி. வழக்கமாக செல்லும் சாலையில் வாகனத்தில் சென்று கொண்டு இருந்தேன். சற்று குறுகலான சாலை, ஒருபுரம் ஏரிக்கரை, மறுபக்கம் புதர் மண்டிய ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிக்கொண்டு இருக்கும் நிலங்கள். வழக்கமாக அந்த சாலையை நெரிசல் இல்லாமல் கடந்து விடுவேன். இன்று வழக்கத்தை விட சற்று போக்குவரத்து நெரிசல், வாகனங்கள் ஊர்ந்து சென்றன. 'சரி, ஏதோ ஒரு வண்டி பிரேக் டவுன் ஆகியிருக்கும்' என்று நினைத்துக்கொண்டு, முன் ஊர்ந்த வாகனத்தை, பின் தொடர்ந்து ஊர்ந்தேன். சற்று தொலைவு சென்றதும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மோர் அல்லது பானகம் குடித்துக்கொண்டும், தக்காளி அல்லது புளியோதரை சாதம் சாப்பிட்டுக்கொண்டு மக்கள் நின்றுகொண்டு இருந்தார்கள். ‘இங்க எதுக்கு இத கொடுத்துட்டு இருக்கிறாங்க’, என்று நினைக்கையில், புதர்களோடு சேர்ந்து ஒரு சிறிய கோவில், நல்ல அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
இந்தமாதிரி அன்னதானம் கொடுப்பதில் சில கேள்விகள் தொக்கி நிற்கின்றன...
* மோர் அல்லது பானகம் கொடுப்பதை கூட வெயிலுக்காக 'சரி பரவாயில்லை' என்று விட்டுவிடலாம், ஆனால் 11 மணிக்கு கொடுக்கப்படும் , உணவு உண்மையாக பசியை போக்கவா?
* அடுத்தது, plastic டம்ளர் மற்றும் தட்டுகளில் சாப்பிட்டுவிட்டு, through ball மற்றும் flying disk விளையாடிவிட்டு, சென்றுகொண்டு இருந்தார்கள்.
* அடுத்தது, இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.

அறம் செய விரும்பு ....அதில் .....நன்மை கடைபிடி !!!

1 comment:

Sonal Jain said...

• Aurobindo Pharma seeks environment nod to expand Srikakulam Unit-9, Aurobindo Pharma Unit-9 to make bulk drugs, intermediates
CapitalStars

குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...