சித்திரை திருநாள் வாரம் சென்னையில் இருக்க நேர்ந்தது. ஞாயிறு மதியம் உணவு உண்ட பின், வழமையாக தூங்கி அ.

திருவான்மியூர் வழியாக திரும்புகையில், மாலை வெயிலில் கூட்டமாக இளைஞர்கள் கூட்டம் அள்ளியது சத்யம் வாசலில். 'சரி விடு, தியாஐராஜர் திரையரங்காக இருந்தபோது, ஞாயிறு மாலை நாமும் இங்கு தானே நின்றுகொண்டு இருந்தோம்'.
அதே வாரம், ஈரோடு சம்பத் நகர் நவீன நூலகத்தில் ஒரு நிகழ்வு. நண்பர் ஈரோடு கதிர் அவர்கள் உரையாற்றுவதை கேட்கவும், அவருடன் உரையாடவும் சென்றிருந்தேன். இங்கும் ஒரு நேர்த்தியான கருத்தரங்கு கூடம், பயிற்சி வகுப்புகளுக்கான அறை, பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தனித்தனி படிக்கும் அறைகள் மற்றும் கழிப்பறை வசதி என ஒரு 'மினி' அண்ணா நூலகத்தை கொண்டு இருந்தது. இங்கும் தேநீர் கொடுக்கப்ப்பட்டது(வரலாறு மீண்டும் முக்கியம்). இரண்டு நூலகத்தின் நிகழ்விலும் ஏறக்குறைய அரங்கு நிரம்பி இருந்தது(நானே நூலகம் செல்லும்போது, அரங்கு நிறையத்தானே செய்யும்) . "நல்ல வசதிகளுடன் உள்ளது இந்த நூலகத்தை, நாம் சிறப்பாக பயன்படுத்த வேண்டும்" என்று அப்போது கூறிய ஈரோடு கதிர் அவர்கள், கடந்த ஞாயிறு அன்று, ஈரோடு வாசல் குழுமத்தின் மலர்களை பேச அழைத்து 'புத்தகங்களைப் பேசுவோம்' என்ற தலைப்பில் நடத்தியது, அண்ணா நூலகத்தின் நிகழ்வு போல் ஆன ஒன்று. .
இந்த இரு நூலக வடிவமைப்பின் ஒற்றுமையை விட மேலும் ஆச்சர்யமூட்டிய ஒன்று. அண்ணா நூலகம் பற்றி சில தகவல்களை அறிய இணையத்தில் தேடும்பொழுது, வந்து விழுந்தவை 'பொன்மாலைப் பொழுதின் காணொளிகள்'(இதற்குத்தானே ஆசைப்பட்டாய் . இந்த காணொளிகள் காலைப்பொழுதையும் அதன் நடைபயிற்சியையும் 'கற்றலின் கேட்டல் நன்று' என இனிதாக்குகின்றன. படிக்க நேரம் கிடைக்காமல் அ. விருப்பம் இல்லாமல் இருப்பவர்களுக்கு இந்த காணொளிகள் வரம்.
அதிலிருந்து எனது செவிக்கு உணவிட்ட சித்த மருத்துவர் கு.சிவராமன் அவர்களுடனான வயிற்றின் உணவைப்பற்றிய கலந்துரையாடல் இங்கே.
https://www.youtube.com/watch?v=yGJ4xCbYDfg&t=5643s
No comments:
Post a Comment