Thursday, May 25, 2017

நூலகம் - அகத்திலும், இணையத்திலும்



சித்திரை திருநாள் வாரம் சென்னையில் இருக்க நேர்ந்தது.   ஞாயிறு மதியம் உணவு உண்ட பின், வழமையாக தூங்கி அ.
தொலைக்காட்சியுடன் பொழுதை கழிக்க விருப்பம் இல்லாமல், உண்ட களைப்புடன், மொபைலை நோண்டிக்கொண்டு இருந்தேன்.     அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 'சுஜாதாவின் பன்முக ஆளுமை' என்ற தலைப்பில் பல எழுத்தாளர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என அறிந்து, உடன் இருந்த அக்காவின் மகனையும் இழுத்துக்கொண்டு வண்டியை விரட்டினேன்.   நேரடியாக அரங்கை தேடி நுழைந்து கேட்க ஆரம்பித்தோம்.   நல்லதொரு நிகழ்வு.  சுஜாதா அவர்கள் பற்றி அறியாத தகவல்களையும் அறிய முடிந்தது.     நிகழ்வின் இடையே தேநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது(வரலாறு முக்கியம்).  நூலகத்திற்கு  முதன் முறையாக சென்றிருந்தேன்.  நிகழ்வு முடிந்தவுடன் அப்படியே நூலகத்தை சுற்றி பார்வையிட்டோம்.  படிக்கப்படாமல் அலமாரியில் வைக்கப்பட்டுள்ள புதிய புத்தகம்போல், குளிர்சாதன வசதி செய்யப்பட்டும்,  மக்களால் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஒரு  நூலகம்.    சில  வாரங்களாக  பொன் மாலைப்பொழுது என்ற நிகழ்வின் மூலம் பிரபல எழுத்தாளர்களின்  கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதையும்  அறிந்து, 'சென்னையிலேயே வசித்து இருக்கலாமோ' என்ற ஏக்கம் ஒரு கணம் வந்து சென்றது.    இது மட்டுமல்லாமல் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பு என நல்ல முயற்சிகள் திரு உதயச்சத்திரன் அவர்களால் எடுக்கப்பட்டு வருவது மகிழ்ச்சி.

திருவான்மியூர் வழியாக திரும்புகையில், மாலை வெயிலில்  கூட்டமாக இளைஞர்கள் கூட்டம் அள்ளியது சத்யம் வாசலில்.  'சரி விடு, தியாஐராஜர் திரையரங்காக  இருந்தபோது, ஞாயிறு மாலை நாமும் இங்கு தானே நின்றுகொண்டு இருந்தோம்'.  


அதே வாரம், ஈரோடு சம்பத் நகர் நவீன நூலகத்தில் ஒரு நிகழ்வு.  நண்பர் ஈரோடு கதிர் அவர்கள் உரையாற்றுவதை  கேட்கவும், அவருடன் உரையாடவும் சென்றிருந்தேன்.   இங்கும் ஒரு நேர்த்தியான கருத்தரங்கு கூடம், பயிற்சி வகுப்புகளுக்கான அறை, பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தனித்தனி படிக்கும் அறைகள் மற்றும் கழிப்பறை  வசதி என  ஒரு 'மினி' அண்ணா நூலகத்தை கொண்டு இருந்தது.   இங்கும் தேநீர் கொடுக்கப்ப்பட்டது(வரலாறு மீண்டும் முக்கியம்).  இரண்டு நூலகத்தின் நிகழ்விலும்  ஏறக்குறைய அரங்கு நிரம்பி இருந்தது(நானே நூலகம் செல்லும்போது, அரங்கு நிறையத்தானே செய்யும்) .  "நல்ல வசதிகளுடன் உள்ளது இந்த நூலகத்தை, நாம் சிறப்பாக பயன்படுத்த வேண்டும்" என்று அப்போது கூறிய  ஈரோடு கதிர் அவர்கள்,    கடந்த ஞாயிறு அன்று,   ஈரோடு வாசல் குழுமத்தின்  மலர்களை பேச அழைத்து 'புத்தகங்களைப் பேசுவோம்'  என்ற  தலைப்பில் நடத்தியது,  அண்ணா நூலகத்தின்  நிகழ்வு  போல் ஆன ஒன்று.     .    

இந்த இரு நூலக வடிவமைப்பின் ஒற்றுமையை விட மேலும் ஆச்சர்யமூட்டிய ஒன்று.        அண்ணா நூலகம் பற்றி  சில தகவல்களை அறிய இணையத்தில் தேடும்பொழுது, வந்து விழுந்தவை  'பொன்மாலைப் பொழுதின் காணொளிகள்'(இதற்குத்தானே ஆசைப்பட்டாய் .    இந்த காணொளிகள்  காலைப்பொழுதையும் அதன் நடைபயிற்சியையும்  'கற்றலின் கேட்டல்  நன்று' என இனிதாக்குகின்றன.       படிக்க நேரம் கிடைக்காமல் அ. விருப்பம் இல்லாமல்   இருப்பவர்களுக்கு  இந்த காணொளிகள் வரம்.

அதிலிருந்து  எனது செவிக்கு உணவிட்ட  சித்த மருத்துவர் கு.சிவராமன் அவர்களுடனான வயிற்றின் உணவைப்பற்றிய கலந்துரையாடல் இங்கே.

https://www.youtube.com/watch?v=yGJ4xCbYDfg&t=5643s

நடத்துனர் என்னும் மகான்...

கடந்த சனிக்கிழமை.  மாலை நேரம்.  ஈரோட்டில் இருந்து ஊருக்கு செல்ல பேருந்தில் ஏறினேன்.   சூரம்பட்டி நால்ரோடு நிறுத்தம்.  வழக்கத்திற்கு மாறாக திமுதிமு என்று கூட்டம் முண்டியடித்தது, கூடவே டாஸ்மாக் வாடையும்.   "என்னங்க, இங்க இவ்வளவு பேர் எறுகிறாங்க"  நடத்துனர் அருகில் இருந்ததால் வினவினேன்.  
"இங்கதாங்க கடை இருக்கு" கூறிக்கொண்டே வாடைகளின் ஊடாக, அவர்களுக்கு இடையே நீந்த ஆரம்பித்தார்.
கிட்டதட்ட அங்கிருந்து  மொடக்குறிச்சி வழியாக விளக்கேத்தி வரையிலான சுமார் 20 கிமீ தொலைவிற்கு, பஸ் வசதியுடன் கூடிய கடை இல்லை என்ற பொது அறிவு அப்போது தான் தெரிந்தது.  
நீந்த ஆரம்பித்த நடத்துனர் மகான் இவர்களுக்கு இடையே நெளிந்து சென்று டிக்கெட்  கொடுத்துக்கொண்டே செல்கிறார். தெய்வ லெவல்.  அவருக்கு இந்த வாடை பழகி இருக்குமோ? 
சரி, நம்ம ஊர் பஸ்ல ரொம்ப நல்லா காற்று வருமே, ஏன் வரலைன்னு யோசித்துக்கொண்டே ஜன்னலைப் பார்த்தேன். ஊர் நெருங்கியதை உட்கார்ந்து இருப்பர்களே குனிந்து பார்த்து  தெரிந்து கொள்ளும் அளவிற்கு சிறிய ஜன்னல்.   அவர்கள் வாங்கிக்கொண்டது போக மீதி   காற்று, தலைக்குமேல் உயரமாக நீட்டிக்கொண்டு இருக்கும் இருக்கை நடுவே புகுந்து, கொஞ்ச சில்லரையையும் கொடுக்காமல் போகும்  நடத்துனர்   போல், வர மறுத்தது.  சரி, காற்று தான வரலை வெளியே வேடிக்கை பார்த்து, இந்த ஓல்டு மாங்குகளிடம் இருந்து தப்பிக்கலாம்  என்று, மேல் கண்ணாடியை நோக்கினேன்.     கண்ணாடி முழுவதுமாக  விளம்பரங்களுடன் கூடிய ஸ்டிக்கர்.  ஸ்ஸ்அப்பா ,  எங்க போனாலும்
கேட் போடறாங்களே என்று வடிவேல் மொழியோடு, ஊர் நெருங்கியதை எப்படி தெரிந்து கொள்வது என நொந்து கொண்டு,   மொபைலை நோண்ட ஆரம்பித்தேன்.    
தயவு செய்து பேருந்தை டிஸைன் செய்யும் புண்ணியவான்கள் நன்றாக காற்று வருவதற்கு  வசதி உள்ள ஜன்னல்கள் வைத்து, குடிக்காத பயணிகள், சக பயணியின் மீது உண்ட உணவை உமிழ்வதை  தவிர்க்க  உதவ வேண்டுகிறேன். 
மகளிர் ஸ்பெசல் போல, டாஸ்மாக் ஸ்பெசல் வண்டியை போக்குவரத்து கழகங்கள் யோசிக்கலாம். 
#ஈரோடு #பயணங்கள்

Wednesday, April 26, 2017

அன்னதானம்?

காலை 11 மணி. பெங்களூரின் புறநகர் வர்த்தூர் ஏரி. வழக்கமாக செல்லும் சாலையில் வாகனத்தில் சென்று கொண்டு இருந்தேன். சற்று குறுகலான சாலை, ஒருபுரம் ஏரிக்கரை, மறுபக்கம் புதர் மண்டிய ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிக்கொண்டு இருக்கும் நிலங்கள். வழக்கமாக அந்த சாலையை நெரிசல் இல்லாமல் கடந்து விடுவேன். இன்று வழக்கத்தை விட சற்று போக்குவரத்து நெரிசல், வாகனங்கள் ஊர்ந்து சென்றன. 'சரி, ஏதோ ஒரு வண்டி பிரேக் டவுன் ஆகியிருக்கும்' என்று நினைத்துக்கொண்டு, முன் ஊர்ந்த வாகனத்தை, பின் தொடர்ந்து ஊர்ந்தேன். சற்று தொலைவு சென்றதும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மோர் அல்லது பானகம் குடித்துக்கொண்டும், தக்காளி அல்லது புளியோதரை சாதம் சாப்பிட்டுக்கொண்டு மக்கள் நின்றுகொண்டு இருந்தார்கள். ‘இங்க எதுக்கு இத கொடுத்துட்டு இருக்கிறாங்க’, என்று நினைக்கையில், புதர்களோடு சேர்ந்து ஒரு சிறிய கோவில், நல்ல அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
இந்தமாதிரி அன்னதானம் கொடுப்பதில் சில கேள்விகள் தொக்கி நிற்கின்றன...
* மோர் அல்லது பானகம் கொடுப்பதை கூட வெயிலுக்காக 'சரி பரவாயில்லை' என்று விட்டுவிடலாம், ஆனால் 11 மணிக்கு கொடுக்கப்படும் , உணவு உண்மையாக பசியை போக்கவா?
* அடுத்தது, plastic டம்ளர் மற்றும் தட்டுகளில் சாப்பிட்டுவிட்டு, through ball மற்றும் flying disk விளையாடிவிட்டு, சென்றுகொண்டு இருந்தார்கள்.
* அடுத்தது, இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.

அறம் செய விரும்பு ....அதில் .....நன்மை கடைபிடி !!!

தாய்மொழி பயிலல்


தாய்மொழி பயிலல் :
 ------------------------------
செய்தி : “பிற மாநிலத்தவரும் தமிழ் படிக்க வேண்டும்!" முதல்வர்கள் கூட்டத்தில், பிரதமர் மோடி பேச்சு.
அரசியல் தவிர்த்து இதை சற்று உள்நோக்கி பார்ப்போம்.
வேலை நிமித்தமாக ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலத்திற்கு சென்று வசிப்பவர்கள் இன்றைய கால கட்டத்தில் மிகவும் அதிகம். அவர்கள், தங்களது குழந்தைகளை தங்கள் தாய் மொழியில் படிக்க வைக்க நினைத்தாலும் முடியாத சூழலே 'இந்தி'யாவில் நிலவுகிறது. தாய்மொழிக்காக பலர் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்ப நினைத்தாலும், சொந்த ஊரில் அதே போன்ற, அதே ஊதியத்தில் வேலை கிடைக்குமா என்ற அச்சம், அங்கு திரும்ப நினைப்பதை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. சொந்த மாநிலத்திலும் பெரு நகரங்களையே பணிகளுக்கு நம்பி இருப்பதாலும், சொந்த ஊருக்கும் பெரு நகரத்திற்குமான இடைவெளி மற்றும் போக்குவரத்தில் உள்ள சிக்கல் மற்றோர் காரணமாகவும் உள்ளது.
பெங்களூரை உதாரணமாக எடுத்துக்கொண்டால், பெங்களூரை ஒட்டியுள்ள சுமார் 200-300 கிமீ தொலைவில் உள்ள பெருவாரியான மக்கள் பெங்களூரையே வாழ்வாதாரமாக கொண்டு உள்ளார்கள். இது தமிழ்நாட்டிற்கு மட்டும் அல்ல.. ஆந்திர மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கும் பொருந்தும். இதே மனநிலையில் தான் சென்னையில் வாழும் பிற மாநிலத்தவரும் இருக்கக்கூடும் என கருதுகிறேன்.
மோடி அவர்களின் இந்த பேச்சு மனப்பூர்வமாக இருந்தால், மத்திய அரசு இதனை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த ஆவன செய்ய வேண்டும். மாநில அரசுகளும், மற்ற மாநில மொழிகளுக்கு மதிப்புக் கொடுத்து இதனை செயல் படுத்த முயற்சி எடுக்கலாம்.
படத்தில் இருப்பது பெங்களூரின் மைய பகுதியில் இருக்கும் அரசு தமிழ்ப் பள்ளி. இதன் பின்னால் அழகாக பொழிவுடன் இருப்பது திப்பு சுல்தான் சம்மர் பேலஸ்.
(சொந்த ஊருக்கு பக்கத்துல இருக்குன்னு பெங்களூர் வந்துட்டு, நாம படும் பாடு இருக்கே... 😥 )

மொடக்குறிச்சி கிருஷ்

27-April-2017

Sunday, April 09, 2017

நீரோடும் எங்கள் ஈரோடு

நீரோடும் எங்கள் ஈரோடு


"ஈரோடு வாசல்" வாட்ஸ் அப் குழுவில், கடந்த ஒரு சில வாரங்களாக
நடைபெற்ற"ஈரோடு மாவட்டம்" பற்றிய கட்டுரை எழுதும் போட்டியில் முதல் இடம் பிடித்த எனது கட்டுரை.
-------------------------------------------
நீரோடும் எங்கள் ஈரோடு
==========================

இரு ஓடைகளுக்கு மத்தியில் இருப்பதால் வந்த பெயர். பல காலங்களுக்கு பிறகு இரண்டு ரோடுகளுக்கு மத்தியில் இருப்பதால் ஈரோடு என்ற பெயர் வந்ததாக வரலாறு சொல்லுமளவுக்கு, நமது காலகட்டத்தில் உருமாறிக் கொண்டு உள்ளது.


நம்மூர் கலிங்கராயனில் குட்டிக்கரணம் போட்டு, அம்மாயி ஊருக்கு செல்லும்போது அங்குள்ள கீழ்பவானியிலோ, சுற்றியுள்ள கிணற்றிலோ குமுளி போட்டு நீச்சல் பழகியவர்கள் நாங்கள் என்றால், நமது பிள்ளைகள் கூட நம்ப மறுக்குமளவிற்கு நீர் வரத்து  இன்று இல்லை.   அவ்வாறே ஒரு போகத்திற்கு நீர் வந்தாலும், கழிவுகள் களைந்து முடிவதற்குள் நீர் வரத்து நின்று விடுகிறது.  

நாம் எதையும் மாசு படுத்தவில்லை, இந்த சாயத்தொழிற்சாலைகளே நமது நீரோடைகளையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகின்றன  என்று  நம்பிக்கொண்டு இருக்கிறோம்.   ஆனால், நமக்கே தெரியாமல் நாமும் மிக முக்கிய காரணமாக இருக்கிறோம் என்பது கசப்பான உண்மை. 

சற்று பின்னோக்கி பயணம் சென்று, 1980 மற்றும் 90 களில் இருந்த ஈரோட்டையும், அதன் கிராமங்களையும் பார்ப்போம்.

பச்சை பந்தலிட்டு
மாயிலை தோரணம்கட்டி..
மாட்டு சாணத்தில் வாசல் மெழுகி
உறவினர்கள் ஒன்றாககூடி
வீட்டோடு திருமணம்.

தொப்புள் கொடி அறுபட
மூதாட்டி துணையோடு
மனையில் சுகமாக பிறந்த
மழழை...

பாட்டி மடியில் கதை பேசி
தாத்தாவுடன் விளையாடி
ஊரார்  ஊட்டி வளர்க்க
வளர்ந்து.

பல் துலக்க ஆலும் , வேலும்
தலை முழுக்க அரப்பும் , சீகைக்காயும்
மேனிக்கு கடலைமாவு
தமக்கை முகம் பூசும் மஞ்சள்
தலைவார தேங்காய் எண்ணெய்.
என்று தூய்மை பேணி.

காலை உணவாக கம்பங்களியும், ராகிக்கூழும்
புறக்கடையில் பறித்து வந்த கீரையும், காய்கறியும்
நம் பெயர் வெட்டிய சிறு போசியில் உண்ட  உணவு.
எவ்விடத்திலும் அள்ளி பருகும் நீரும்

காக்கி வெள்ளையோடு நாம்
கதர் வேட்டி சட்டை கட்டிய அப்பா
நோம்பி என்றால் மட்டுமே அதுவும் கட்டும் தாத்தா
நூல் சேலையில் கொசுவம் வைத்து கட்டும் பாட்டி
நோம்பிகளுக்கு மட்டுமே புடவை எடுக்கும் அம்மா

பள்ளிசெல்ல ஓட்டமும் நடையும்
வேலைக்கு போக ஒரு மிதிவண்டியும்
ஈரோடு டவுனுக்கு செல்ல சில டவுன் பஸ்களும்


மஞ்சள் பையுடன் கடைக்கு செல்லும் குட்டிகள்
செய்தித்தாளில் அன்போடு கட்டிக் கொடுக்கும் கடைக்காரர்

சிறு புண்ணுக்கு கசக்கி விடப்படும் செடி
வேது வைக்க வற்றிய வீக்கம்
தேடி இலை பறித்து
வைத்தியம் செய்யும் ஒரு பாட்டி

சுற்றம் சூழ குளிப்பாட்டி  
பச்சையில் பாடை கட்டி
ஆவரஞ்செடிக்கு பால் ஊற்றி
பாட்டுப்பாடி
விடை அனுப்பப்பட்ட  நம் தாத்தா...

இன்னும் இன்னும்  ....

ஏக்கத்தோடு கூடிய பெரு மூச்சு வருகிறது, இப்படி சின்ன சின்ன கிராமத்து மணமுடன் திகழ்ந்த ஈரோடை இன்று பார்க்கும் பொழுது
....

2017 க்கு வருவோம்

"பெருந்துறை ரோட்டுல X மண்டபம் எப்ப கிடைக்குதுன்னு பாருங்க , கல்யாணத்தஅப்ப வெச்சுக்கலாம்" சம்மந்தி வீட்டினர்.    

ரெண்டு பெரிய ப்ளக்ஸ் முன்னாடி வெச்சுரலாம். இந்த பக்கம் ஒரு கிலோ மீட்டர் அந்தப்பக்கம் ஒரு கிலோமீட்டர்  லைட் மின்னணும். மண்டபம் முழுக்க சீரியல் செட்.   ரெண்டு மூணு  TV  வெச்சு லைவ் டெலிகாஸ்ட்என்று ஒரு அரசியல் கட்சி கூட்டத்தையே மிஞ்சும் அளவுக்கான  தடபுடல்கள்.

சாப்பாட்டு விஷயத்தை பற்றி பேசவேண்டியதில்லை, அதில் வீணாக்கப்படும் உணவுகள் மற்றும் திண்பண்டங்கள்   என்ன  மாதிரியான  விளைவுகளை  நமக்கு விட்டு செல்கிறது என்பதை தெரிந்தும், ஒரு மரக்கன்றையோ, புத்தகங்களையோ பரிசளித்து நல்லவர்களாக காட்டிக்கொள்கிறோம்.


"ஏங்க நா எல்லார்த்துக்கிட்டயும் விசாரிச்சுட்டேன், ஈரோட்டுல அந்த X ஹாஸ்பிடல்ல இருக்குற, Y  டாக்டர் அம்மா ரொம்ப நல்லா பாக்குறாங்களாம், அவங்ககிட்ட போற எல்லோருக்கும் நார்மல் டெலிவரி ஆகுதாம், நாம அங்கேயே பார்த்துக்கலாம்"  ஈரோடு சுற்றுவட்டாரத்தில் இந்த குரல் ஒலிக்காத வீடுகளே இல்லை.  இயல்பாக உண்டானாலும் மாதமொரு செக்அப்க்கு, அங்கு சென்றால், நமக்கும் சுகப்பிரசவம் என்ற மூடநம்பிக்கையில், காலை முதல் மாலை வரை அந்த மருத்துவர் பார்க்கும் வரை    காத்திருந்து, வெயிலில் புழுங்கி, ஒரு வழியாக வீடு வந்து சேருவோம். 



இதுக்கு முன்னாடி ஒரு படலம் இருக்கிறது, அது செயற்கை முறை கருத்தரிப்பு.  பல மாவட்டங்களில் இருந்தும் இன்று ஈரோட்க்கு படையெடுத்து வருகிறார்கள் கருத்தரிப்பதற்கு.  பெருந்துறை ரோட்டில் புற்றீசல்போல் முளைத்துக்கொண்டு இருக்கும் கருத்தரிப்பு மையங்கள் இதற்கு சாட்சி சொல்லும்.  அவர்கள் கொடுக்கும் மருந்துகளும் மாத்திரைகளும், அதற்காக தள்ளுபடி விலையில் தெருவுக்கு, தெரு கிளைகள்  திறந்து கொண்டு உள்ள மருந்தகங்களும்ஒரு தனி கதை.


குழந்தை பிறந்தவுடனே தாய்ப்பால் கொடுக்கறாங்களோ இல்லையோ  hygenically packed  பால் பவுடர் வாங்க சொல்லும் மருத்துவர்கள்.   ஒவ்வொரு சில பல மாதங்களுக்கும் போஷாக்கு அளிக்கும்(அழிக்கும் ??)  ஊட்டச்சத்து  பானங்கள்.   வெளிநாட்டில்  இருந்து தருவிக்கப்பட்ட குழந்தைகளுக்கான  சோப்பு மற்றும் பவுடர். தடுப்பூசி என்ற பெயரில் நடக்கும் வணிகம்.  


பல் துலக்க விதவிதமான பற்பசைகள், 6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றப்படும் பிரஷ், ஷாம்பு இட்டு முடி உதிர்ந்த தலைகள், இருக்கும் முடிக்கும் சாயமிடும் நரைதலைகள்,  15 நாளில் அழகு தரும் முகப் பூச்சுக்கள் மற்றும் வண்ண வண்ண சோப்புகள், இவை களையும்போது, கழிவுகள் அனைத்தும் சென்று சேருமிடம் வேறு
எங்கும் இல்லை, கத்தி திரைப்படத்தில் விஜய், மேஜைக்கு அடியில் அண்டர் கிரௌண்ட் மேப்  பார்ப்பது போல பார்த்தால், பெரும்பள்ளம் ஓடை வழியாக காவேரிக்கு  சென்று கொண்டு இருக்கும்.


"X மெஸ்ல பரோட்டா மறக்காம வாங்கிட்டு வாங்க.  அங்கதான் கொளம்பு நல்லா இருக்குதாம்"  பாலிதீன் பையில் சுடசுட ஊற்றிக் கொடுக்கப்படும் குழம்பு புற்றுநோயின் ஒரு காரணி என்பதை அறியாத அப்பாவிப் பெண்மணிகள்.  அப்படியே அறிந்தாலும் எப்பவாவது என்று மாதம் சில  முறையாக பழக்கப்படுத்திக் கொண்டோம். 


"8 மணி ஆயிருச்சு, இந்த ஸ்கூல் வேன எங்க இன்னும் காணோம்" என்று புலம்பாத வீடுகள் குறைவு.  நம் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் அரசு பள்ளிக்கு, 5 கிலோமீட்டர்  நடந்து வந்து படிக்கும் குழந்தைகளும்,   நம் குழந்தைகள் 10 கிலோமீட்டர் தள்ளி  உள்ள தனியார்  பள்ளிக்கு  மூச்சுமுட்ட பள்ளிப்பேருந்தில்  பயணம் சென்று படிப்பதும் இயல்பான ஒன்றாக மாறியுள்ளது.

மேட்டூர் சாலையில் சமீபத்தில் துவங்கியுள்ள  துணிக்கடை.   ஒரு பேண்ட், சர்ட்  வாங்க சென்றேன்.  பில் போட்டு டெலிவரி வாங்கும் சமயம், ஒரு அம்மா  "2000 ரூபாய்க்கு மேல வாங்கிருக்கேன்அதனால 2 கட்ட பை கொடுங்க" என்று கேட்டுக்கொண்டு இருந்தார்.   டெலிவரி கொடுப்பவரும் முணுமுணுத்துக்கொண்டு இன்னொரு பையை தருகிறார்.   இந்த கட்டபை என்று சொல்லக்கூடிய பை, முன்பு போல சணலால் ஆனதல்ல.  எனக்கும்  ஒரு கட்ட பையில், காக்கி காகித கவரில்  போடப்பட்ட துணியை, வைக்க  முயல்கிறார்.  நான்  "கட்டப்பை வேண்டாங்க, அப்படியே குடுங்க " என்று சொல்லிவிட்டு, காக்கி காகித கவரில்  போடப்பட்டதுணியை  வாங்க, அவர்  என்னை  மேலும் கீழும் பார்க்கிறார்.  


80 மற்றும் 90களில் எவ்வளவு எளிமையான, இயற்கையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு  இருந்தோம்.   நாகரீகம்நவீனம் என்ற பெயரில், இன்றளவில் நிகழ்ந்துகொண்டு இருக்கும்இந்த ஒரு சில சம்பவங்கள் ,   நமக்கும், நமது சுற்றுப்புறத்திற்கும் நல்லவை எது, அல்லவை எது என்று பிரித்து அறியமுடியாத அளவில் நம் வாழ்வோடு இரண்டற கலந்துவிட்டதை  உணர்த்தும்.     



இன்றளவில் ஈரோட்டை மீட்டெடுக்கலாம் என்று நம்பிக்கையை கொடுத்துக்கொண்டு  இருப்பதுசில நல்  உள்ளம் படைத்த மனிதர்கள்சத்தமில்லாமல் ஈரோட்டில் எற்படுத்திக்கொண்டு இருக்கும் நீர்நிலை பாதுகாப்பு, இயற்கை பற்றிய விழிப்புணர்வுகள், நல்ல உணவுப்பழக்க  வழக்கங்களுக்கான முன்னெடுப்பு.   நம்மளவில் நாம் நமது ஈரோட்டையும் அதன் சுற்றுப்புறத்தையும்  எப்படி வைத்துள்ளோம் என்று, காலை முதல் மலை வரை நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் சிந்தித்து, நமது பங்களிப்பை அளிக்க முயற்சி எடுப்போம்.



புகைவண்டியில் வரும்பொழுது காவேரிப் பாலம் தடதடவென சப்தமிட்டு ஈரோடு வந்து விட்டதை நினைவு கூறும்.  காவிரியில் எவ்வளவு நீர் சென்றுகொண்டு உள்ளது என்று  நாமும் ஒவ்வொரு முறையும் எட்டி பார்ப்போம்.   காவிரி இன்னுமொரு பாலாறாக மாறாமல் இருக்க, நாம் மாறுவோம், நமக்காக.



மொடக்குறிச்சி கிருஷ்
22-March-2017




Thursday, March 16, 2017

பெற்றோர்கள் vs பிள்ளைகள்” உலகம் - நேற்று, இன்று, நாளை!

தவிதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமா...  நம் தாத்தா பாட்டிக்களை நமது அப்பா அம்மா எப்படி கவனித்துக் கொண்டனர்  என்பதை நாம் பார்த்து வளர்ந்தோம்.  அதைப்போல நாமும் நம் அப்பா அம்மாவுக்கு செய்கிறோம இன்றைய கால சூழலுக்கு தகுந்தது போல்.    நமது குழந்தைகளும் நம் நடவடிக்கைகளைப பார்த்தே பல விசயங்களை கற்றுக் கொள்கிறார்கள்.   அதனைப்பார்த்து  அவர்களாகவே கால சூழலுக்கு தகுந்து அன்பு செலுத்துவார்கள் ...

15-Mar-17 :
”பெற்றோர்கள் vs பிள்ளைகள்” உலகம் - நேற்று, இன்று, நாளை!
ஈரோடு வாசல் குழுமம்

வட்டார மொழி

வட்டார மொழி அனுபவம் நம் அனைவருக்கும் இருக்கும்.... இது என்னோட அனுபவத்தில் ஒ்ரு பகுதி....
நாங்க ரெண்டு  பேர், நம்ம கொங்குநாடு பகுதில இருந்து பாண்டிய நாட்டுக்கு படையெடுக்க சாரி... படிக்க போனோம்...  ஒரு ரூம்ல பட்டறை போடறது வழக்கம்...ஒருநாள் பட்டறை போட்டு முடிந்ததும்  நண்பன் கிட்ட நம்மூரு வழக்குல சொன்னனேன்....'செருப்ப தொட்டுக்கிட்டு வாடா '-ன்னு... 

'எப்படி செருப்ப போய் தொட்டு பார்த்துட்டு ஒடிரூவீன்ங்களா' ...  அப்டீன்னு ஆரம்பிச்சு....ஒட்டுக்கா ஓட்டி தள்ளிட்டாங்க... ஒட்டுக்காவுக்கும் சேர்த்து ஒரு ரவுண்ட் வர...

நாம மட்டும் சும்மா விட்டுறுவோமா...
'கல்லவுட்டு எறி' ல ஆரம்பிச்சு...ஒரு ரவுண்டு வருவோம்...

இப்படி வட்டார மொழி அனுபவங்கள வச்சு ஒரு தொடரே எழுதலாம்....

1-Feb-2017 வட்டார மொழி பற்றி ஈரோடு வாசல் குழுமத்தில்

ஓபிஸ் vs சசிகலா

இந்த 9 நாட்கள் நடந்த நிகழ்வுக்கான ஆரம்பப்புள்ளி சல்லிக்கட்டு எழுச்சி என்றே கருதுகிறேன்.   சமூக வலைதளங்கள் மக்களின் பிரதிபலிப்பாக இரண்டு நிகழ்வுகளையும் ஒரே மாதிரி இட்டு சென்றன.  சல்லிக்கட்டுக்கு இரு கட்சிகளின் மறைமுக ஆதரவு இருந்தது..  ஆனால் பிந்தைய நிகழ்வுக்கு உட்கட்சிப் பூசல் என்று வேடிக்கை பார்க்கும் இடத்தில் இருந்தோம்.   இது அடக்குமுறையை எதிர்த்து பதிவு செய்யப்படுவதற்கான அடுத்த முயற்சி.. 

  இந்த நேரத்தில்,  ஒரு சம்பவத்தை நினைவு கூர்கிறேன்...ஐடி மக்கள் அதிகம் நிறைந்த பெங்களூரு ஒய்ட்பீல்டு பகுதியில், ஒன்றரை ஆண்டுக்கு முன் சாலை மற்றும் அடிப்படை தேவை யை பூர்த்தி செய்ய கோரி ஐடி மக்கள் அமைதியான மனித சங்கலி நடத்தினர்.  எதிர் பாராத அளவுக்கு ஐடி மக்கள் பங்கேற்றனர்.  அடுத்த 8 மாதங்களில் படிப்படியாக நிறைவேறியது.  இது சமூக வலைதளங்களால் மட்டுமே சாத்தியமானது.

சமூக வலைதளங்கள் அடுத்த புரட்சி களில் மிகமுக்கிய பங்காற்றும் என்றே கருதுகிறேன்

15-Feb-2017 ல் ஈரோடு வாசலில் இட்ட பதிவு...

Saturday, April 18, 2015

சனு விளையாடல் ...

அப்பா நீயும் கைல  nail  polish  போட்டுக்கனும் ...


Saturday, September 21, 2013

Thus my name....

"Krishna" - Ananth called me.  I turned his side.  Neethu another colleague asked me, "Hey! how would you like to  be called,  Krishna  or Krish?".   Smile from me,  "You can call me as you wish.  In my hometown, people used to call me Kumar... in my college days my friends called Kicha and in my previous projects people called me KK".
She said "KK is good and people call Kichu for the name Krishna  in Kerala"
I replied "Now I remember, one of my previous project mate Arun,  who also from God's own country used to call me Kichu".  

...Few things I remembered while writing this.....
Most of the people in my native know me kumar and call me like kumaru.  
One of my neighborhood paatti used to call me "Komaaru kutti",  She called me like that when I saw her couple of month back too.  Still I am kutti for her, even I have kutti now :-)   
Vikravel called me "dumara-anna" in his childhood days !!
Kokki kumaru was my name for Arun Raja & Janani during Pudupettai time...
Senthil Bro always called me "Kumaraa", I can't hear again this from him :-(

During my school/college days, whenever my Appa called my full name  "Krishna Kumar", I knew I got a letter :-)

Native Post man Sir still calling me Nirmal Kumar (our shop name in my native), where Nirmala is my sister's name...

I became Kicha in UG and continued in PG too.  This name is apart from mappla, machan, machi, nanba and pangali !!!

Few of my PG classmates, my Ford colleagues and my SV Milan weekend Cricket mates calls me KK...

My Friend Gopal, replied me one day, 'Machan, Earlier your signature had Kicha , after some time KK, now it has K (was my email signature, when I worked in London)...  How would you shorten after this'  !!!

I don't know, how my fellow flat mates in SV Milan, got my name as Krishnan !!??

I have been called as Krish in TCS, because of my sort and sweet email id...  Thanks da Sens Machan (Sens =>Senthilhe wanna to be called like that), for suggesting this short and sweet id :-)






Sunday, August 25, 2013

சனுவின் அகராதி

குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
மழலை சொல் கேளாதோர்


என்னடா அது ?  வவ் வவ்வா  (நாய் )
அது என்ன? மா  (மாடு )
எத்தனை நாய் இருக்கு?  டூ ( இரண்டை விட அதிகம் இருந்தாலும்.. )
இது என்ன? bee (All alphabets )
பைக் யாரோடது? அப்பாவு   (அப்பாவின் பொருள் )
இந்த மொபைல் யாரோடது? அம்மாவு   (அம்மாவின் பொருள்)
கண்ணாடி யாரோடது?  தாத்தாவு  - (தாத்தாவின் பொருள்) 
பந்து யாரோடது? பாப்பாவு  - (பாப்பாவின் -சனுவின்-பொருள்) 
ஆயா எப்படி தூங்குவாங்க? கொர் கொர் ... (குறட்டை சத்தமாம்..)
பாப்பா என்ன சாப்பிடுது? மம்மு  (உணவு)
என்ன மம்மு? பப்பு  (அனைத்து உணவும் )
அப்பாவுக்கு கொஞ்சம் கொடும்மா? னோ னோ னோ (தரமாட்டாங்கலாம்..thanks to  talking tom...)
யாருக்கு போன் பண்ணலாம்? அம்மாயி தாத்தா 
எனனம்மா வருது ? ஆத்தோ  (ஆட்டோ)

மற்றும் சில...

அம்பு - எறும்பு
அண்ணாய  - அண்ணாவும் நாயும் உள்ள புத்தகம்
மயி - மயில்


Thursday, October 28, 2010

2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்





Inspiring story..,

I have read through, voted and circulating to you all., thatz the minimum that I can do

2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்றுமட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாகஉணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒருராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுகசேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாகஇருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம்.அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல்ஒட்டு போடுவோம்.


இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாகஅறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்தரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக,மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்துகொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்கபட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்குநவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காகநாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விடஇது தான் மகத்தான சாதனை.

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது
: 29
இருப்பு
: மதுரை

அப்படி என்ன செய்து விட்டார்?
அது
நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.

தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும்அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம்.அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களைதேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டிவிடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்துசெய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்கஇந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பதுசாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள்விநியோகிக்கபட்டுள்ளது.

ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலைவல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலைகிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர்அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டுபெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கிவீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்கஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறுகிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவுதருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரதுஅன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான்என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்என்று சொல்லிஅழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய்நீ இவர்களைபார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்என்று சொல்லிருக்கிறார்.இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல்தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.

நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில்வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்றபைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களைபார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்தஅளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்னசெய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில்மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்தமாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல.இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரைபார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறுஉதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும்ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன்என்பதில்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான்
பொருள்வைப் புழி.

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்துவைக்கும் இடம் அதுவே.

ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்

http://www.akshayatrust.org/contact.php

Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India

Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail :
ramdost@sancharnet.in

மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டுபோடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்

http://heroes.cnn.com/vote.aspx

இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பதுபெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதைபதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்


-- It is Forwarded message--

குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...