Wednesday, January 16, 2019
அணில் துள்ளி ஓடும் முன்றிலில்!
Tuesday, August 07, 2018
"ஈரோடு எனது குருகுலம்" கலைஞர்
"ஈரோடு எனது குருகுலம்" கரகரத்த குரலில் கலைஞர் பேச்சை ஆரம்பித்தவுடன் அங்கங்கு சரக்கடித்துக்கொண்டும், சரக்கடித்து முடித்து தம்மடித்துக்கொண்டு இருக்கும் தொண்டர்கள் பரபரப்புடன் தங்களை ஆசுவாசப் படுத்திக்கொண்டு இவரின் பேச்சை அமைதியாக கேட்க இவர் பக்கம் திரும்புவார்கள். தக தக என வண்ண சிறு மின் விளக்குகள் உதய சூரியனாகவும், கலைஞராகவும், கருப்பு சிவப்பில் மின்னிக்கொண்டு இருக்கும். இப்படி கலைஞரை முதன்முதலிலில் பார்த்த இடம் ஈரோடு வ. ஊ. சி. திடலில் தான். பெரும்பாலான அரசியல் கூட்டம் அங்குதான் நடைபெறும். சுமார் ஒரு நாற்பது, ஐம்பது நிமிடங்கள் குறிப்புகளை வைத்துக்கொண்டு, புள்ளி விவரங்களுடன் இடைவிடாமல் அடுக்குமொழியில் பேசிக்கொண்டே செல்வார்.
தேர்தல் பிரசாரத்திற்கு ஈரோடு வருகிறார் என்றால் எங்கள் ஊரின் உடன்பிறப்புகள் பரபரப்பாவர்கள். ஒரு வாரத்திற்கும் மேலாக அண்ணணின் கடையில் கலைஞரின் கூட்டம் பற்றிய பேச்சாகவே இருக்கும். 'நாங்கல்லாம்' என ஆரம்பித்து வெறும் "டீ" குடித்துவிட்டு கட்சிக்கு கொடி நட்ட வரலாரை, அதற்கும் முந்தைய தலைமுறையினர் கூறிவிட்டு இவர்களை உசுப்பேத்திவிட்டு செல்வர். 'அம்மா கட்சிலயாவது ஏதாவது குடுப்பாங்க, நம்ம கூட்டத்துக்குப்போனா நம்ம கட்சில என்ன தராங்க' என்று சொல்லிக்கொண்டே கூட்டத்துக்கு செல்வார்கள் கழக உடன்பிறப்புகள்.
அப்பா ஒரு தீவிரமான கலைஞரின் விசிறி. 2011 க்கான தேர்தலில் "அத்தனை ஊழல் பண்ணிருக்காங்க அவங்களுக்கு போடாதிங்க" என்று காலில் விழாத குறையாக கெஞ்சியும், "கலைஞர தவிர வேற யாருக்கும் போட மனசு வரலை" என மீண்டும் அவருக்கே வாக்களித்துவிட்டு வந்து கூறியவர். அவரைப்போலத்தான் ஊர் பக்கம் பலரும், அதுதான் கலைஞரின் சொத்து, திமுகவின் வாக்கு வங்கி. மதிமுக துவங்கிய புதிதிலும் இது போன்ற பேச்சுக்களை கேட்டுள்ளேன். மதிமுகவில் இருப்பவர்களே கலைஞருக்கு வாக்களித்ததை இப்படி கூறுவார்கள். "சூரியனப் பார்த்தா, கை அங்க தானா போகுதப்பா" .
ஆறாம் வகுப்பில் பிடித்தமான ஒரு பிரிவேளை ஓவியம். ஓவியம் கிறுக்கி, பழகிக்கொண்டு இருந்த காலங்களில், ஒருநாள் ஏனோ உதயசூரியனைப்போட்டு அப்பாவிடம் காட்டி நற்பெயர் எடுக்க முற்பட்டேன். என்னைச் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் கலைஞரைக் கொண்டாடியபோது நானும்தெரிந்தும் தெரியாமல் அவரையே ஆதரிக்க ஆரம்பித்திருந்தேன்.
1996ல் தான் முதல் முறையாக ஓட்டுரிமை. அந்த சமயம் தான் பாட்ஷா விழாவில் ஜெ வை எதிர்த்து தலைவர் ரஜினியின் வாய்ஸ். பரபரப்பானது தேர்தல். அந்த தேர்தலில் தான் ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிபார்க்கும் வரலாற்று நிகழ்வாக எங்கள் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 1033 வேட்பாளர்கள் விவசாய சங்கம் சார்பில் நிறுத்தப்பட்டார்கள். அப்போது +2 தேர்வு சமயம், ஆயினும் "ரஜினி-கலைஞர்-மூப்பனார்" என இவர்களைப்பற்றித்தான் எங்களின் நட்புவட்டம் சிலாகித்துப் பேசிக்கொண்டு இருக்கும்.
எங்கள் தொகுதியில் மட்டும் தேர்தல் ஒரு மாதம் தள்ளிவைக்கப்பட்டு, புத்தகம் போடுமளவு சென்றது. அந்த வருடம் பெருவாரியாக திமுக-தமாக வெற்றி பெற்றிருந்தது.
2006-2011 காலத்தில் சிறு குறுநில மன்னர்கள் துணையுடன், குடும்ப ஆதிக்கத்தினால் ஊழல், இலங்கை படுகொலைகளில் இவரின் செயல்பாடு, கட்சிக்காரர்களின் கல்லூரிகள், கொள்கையிலிருந்து வழுவல் என்று இவரின் வரலாற்றில் பெரும் கறை. அந்த ஐந்து வருடம் தடம்புரண்டு போகாமல் இருந்திருந்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி வேறுவிதமாக, மேற்கத்திய நாடுகளுக்கு சவால் விடும் விதத்தில் அமைந்திருக்கும்.
இன்று, நின்று நிதானமாக அவர் செய்த ஊழலைத்தாண்டி யோசித்துப் பார்த்தால், என் ஊரிலிருந்தும், நண்பர்கள் வட்டங்களில் இருந்தும், சொந்தங்களில் இருந்தும், அன்று திமுக கொடியை நட்டு கதை பேசிக்கொண்டிருந்தோரின் பிள்ளைகள், பேரன்கள் என பலர் அடைந்திருக்கும் பொருளாதார இடம் என்பது அவரவர்களுக்கே தெரியாமல் கலைஞரின் சமூக நீதியால் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டின் மூலம் கிடைத்த இடங்கள் ஒரு மிக முக்கிய காரணம். கிராமங்களில் இருந்தவர்களை மேற்படிப்பு படிக்கவிட்டு விடுதலையாக்கியதில் பெரும்பங்கு அவரையே சாரும். கிராமங்களில் கல்விக்கூடங்களை மீண்டும் திறந்து கல்வியின் விதைகளை ஊன்றியவர் காமராசர் எனில், பள்ளியிலிருந்து அனைத்து விதமான கல்லூரிகளுக்கும் சென்று படிக்கும் ஆகச்சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் என்பதில் இவர் ஒரு சரித்திர நாயகன். இன்றும் தமிழகத்தின் மிக முக்கியமான கல்லூரிகளில் அனைத்து மக்களும் சேரமுடிகிறதென்றால் அது அவரின் சாதனை. இந்த பின்புலத்திலிருந்து வந்தவர்கள் எவ்வளவு கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள் என்பதை சொல்ல தேவையில்லை, ஏனெனில் அது அவர்களின் ஒட்டு மொத்த தலைமுறையின் கனவு. இப்பொழுது நீட் எங்களுக்கு வேண்டாம் என போராடுவதன் நீட்சியும் இதுதான்.
படித்துவிட்டு, வேலையின் பொருட்டு சொந்த ஊரை, சொந்த மக்களை விட்டு வெகுதூரம் விட்டு விலகி இருந்தாலும், இந்த வளர்ச்சி எனும் வீக்கம் தேவையா என்று ஒருபுறம் நினைத்தாலும், கள யதார்த்தம் வேறு.
இன்றைய நிலையில் தொடர்ந்து தொலைநோக்குடன் வழி நடத்தும் தலைவர்கள் இல்லை என்பது தான் வேதனை. நீங்கள் போட்டுக்கொடுத்த வழியில் நடக்க உடன்பிறப்புகள் மட்டுமல்ல உங்களால் பயனடைந்த ஒரு கூட்டம் உலகமெங்கும் விரவிக் கடக்கிறது.
#சென்றுவாதலைவா
#கலைஞர்
Sunday, July 15, 2018
ஓட்டுனருடன் உரையாடல்
எப்பொழுதும் ஆட்டோவிலோ அல்லது வாடகை காரிலோ சொல்லும்போது டிரைவருடன் பேச்சுக் கொடுப்பது வழக்கம். பெரும்பாலும் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் மக்களே இங்கு டிரைவர்களாக இருப்பர். அப்படித்தான் சென்றமுறை பாகிஸ்தானை சேர்ந்த டிரைவர் சூப்பர் ஸ்டாரைப்பற்றி புகழ்ந்து தள்ளினார், அவரது அப்பொழுதுதான் சமூக விரோதிகளைப் பற்றி தலைவர்பேசியிருந்த்தால், ஏனோ ஆர்வம் இல்லாமல் பேசிக்கொண்டு வந்தேன். இருந்தாலும் அவரின் ஸ்டைலை சிலாகித்துக்கொண்டு. சென்றவாரம் மூட்டை, முடிச்சுகளை எடுத்துவைத்த போது நாங்கள் தமிழில் பேசிக் கொண்டிருந்தைக் கேட்டு வாகன ஓட்டுனரும் தமிழில் 'கதைக்க' ஆரம்பித்தார். ஆம் அவர் 18 வருடங்களுக்கு முன் லண்டனுக்கு புலம்பெயர்ந்த தமிழர், ஈழத்தை சேர்ந்தவர்.
பரஸ்பர விசாரிப்புக்குப்பின், பேச்சு அவர்களின் குழந்தைகளின் தமிழைப் பற்றி சென்றது. "பெரியவங்க யாரும் கூட இல்லைங்க, அவங்க இருந்தா கொஞ்சம் குழந்தைகளோடு தமிழில் கதைப்பாங்க ...அதனால தமிழ் குழந்தைகளுக்கு கடினமாக தான் இருக்கு, புரியாததை நாங்களும் ஆங்கிலத்துல தான் பேசறோன்ங்க... பள்ளியிலயும், வெளியிலயும் ஆங்கிலம் இருப்பதால அடுத்த தலைமுறை குழந்தைகள் தமிழ் பேசறது கொஞ்சம் சிரமம் தான்" என்றார். அதைஆமோதித்துவிட்டு "தமிழ்நாட்லயே அந்த நிலைமை தாங்க 'சிட்டில'... ஆங்கில வழி படிப்பு ரொம்ப அதிகமாகிட்டதால, ஆங்கிலம் கலந்து பேசறவங்க அதிகம். இங்லீஸ் எழுத்துல எழுதி தமிழ்ல படிக்கிறவங்களும் நிறைய ஆகிட்டாங்க. நீங்க, ஈழத்தமிழர்கள், இங்க தமிழ் வளர்க்கறதைப் பார்க்கறப்ப மகிழ்ச்சியா இருக்குங்க " என்று கூறிவிட்டு. "இங்க பக்கத்துல உங்க ஊர் அம்மா வாரம் ஒருநாள் தமிழ் சொல்லிக்கொடுக்காறாங்க, வருட முடிவில் 'எக்ஸாம்' கூட இருக்குங்க" ஆங்கிலம் கலக்காமல் என்னால் சரளமாக பேச முடியவில்லை.
"அப்படீங்களா" என்ற எங்களது பேச்சு குடியுரிமை பற்றி திரும்பியது. "இங்க சிட்டிசன்சிப் உங்களுக்கு தந்துட்டாங்களாங்க?" "ஓமங்க, அது வந்து ஆரேழு வருடத்திலயே கொடுத்துட்டாங்க" என்றவர், "உங்க ஊருக்கு வந்திருக்கேன், அங்க ஈழத்தமிழர் எப்படி இருக்காங்க?", இந்த கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை,அவர்களை எங்கோ ஒரு மூளையில் தானே ஒதுக்கி வைத்துள்ளோம். "எங்க ஊருக்கு பக்கத்துல முகாம்ல இருக்கறவங்க எங்க வீடு வேலை செய்யரப்ப பாத்திருக்கேன். வேலை ரொம்ப சின்ஸியரா செய்வாங்க. ஆனா அவங்களுக்கு எல்லாம் இன்னும் சிட்டிசன்சிப் அங்க தரலைங்க" என்றேன். சீரான வேகத்தில் வாகனத்தை பத்து வழிச்சாலையில் செலுத்திக்கொண்டு நம்மூர் பற்றிய நினைவுகளை மலரவிட்டார்.
"இங்க வர்ரதுக்கு முன்னாடி இலங்கைல இருந்து அங்க வந்தப்பண, மடிப்பாக்கத்துல தான் இருந்தேன்ங்க, கொண்டாட்டம்னா அங்கதாங்க... பொங்கல், தீபாவளினா ஒரு திருவிழா மாதிரி ஊரே கலகலப்பா, அருமையா இருக்கும்ங்க, ரொம்ப நல்லா இருந்தது, தமிழ்நாட்டுலயே இருந்துடலாம்ன்னு நினைச்சேன். இப்ப அங்க எப்படி இருக்குங்க" என்று ஆர்வமோடு கேட்டார். 'என்னத்த சொல்ல', என்று நம்மூர் பற்றிய அவரின் எண்ணத்தை மாற்ற எண்ணவில்லை எனினும், இருந்தாலும் சொல்லாமல் இருக்க முடியாது " கொண்டாட்டமல்லாம் அப்படியே இருக்குங்க, ஆனா எல்லாத்துக்கும் மக்கள் போராட வேண்டி இருக்கு, அரசியல்ல பார்த்தீங்கன்ன, ஜெ மறைவுக்கு பின்னாடி ரொம்ப மோசமான நிலைமைல இருக்கு, ஜெ ஆட்சி நல்லா இருந்ததென சொல்லல, ஊழல்தான், ஆனா தமிழ்நாட்டோட உரிமையை பல நேரங்களில் விட்டுக்கொடுக்கலை. இப்ப மத்திய அரசு சைலன்டா எல்லாம் திணிக்கறாங்க. என்ன நடக்கும்ன்னே தெரியலை" ரொம்ப பயமுறுத்திட்டமோ என நிறுத்திக்கொண்டேன்.
"இங்க பிடிச்சிருக்குங்களா?" என்ற வழக்கமான கேள்வி. "இங்க ஆபிஸ் வேலை அப்படீன்னு ஒரு ஸ்டரக்ட்ர்டு லைப். சுத்தமான காற்று, ட்ராபிக் கிடையாது, எதுக்கும் க்யூல நிக்க தேவையில்லை, கட்டர டேக்ஸ்ஸ ஒழுங்கா செலவு பண்ணறாங்க. பணிவான மக்கள். ஆனா, அங்க ஆபீஸ் போறதே பெரும்பாடு தான், ட்ராபிக்ல மாட்டி, பொல்யூசன்ல மாட்டி. காசு கொடுத்தீங்கன்னா மட்டும்தான் வேலை நடக்கும், இல்லனா ஒன்னும் பண்ண முடியாது. ஆனா நண்பர்கள், சொந்தம் எல்லாம் அங்க இருக்கறதால, சோசியல் லைப் அங்கதான் இருக்குங்க. பண்டிகை, பங்ஷன்னா கொண்டாட்டமா இருக்கும்" நான் சொன்னதை அவர் அசை போட்டுக்கொண்டு இருந்தார். அவரின் ஊர் ஞாபகம் வந்திருக்க வேண்டும்.
"போர்க்கு முன்னாடியே இங்க வந்துட்டீங்க, இப்ப நீங்க இலங்கை போன விசா எடுக்கனுமா, இப்ப அங்க நிலமை எப்படி இருக்கு? ஒரு அமைச்சர் கூட விடுதலைப்புலிகளோட தேவை இப்ப ரொம்ப இருக்குன்னு சொல்லிருக்காங்களே?". தோனியதை எல்லாம் சீரியஸாக கேட்டுக்கொண்டு இருந்தேன்.
"அவ்வளவு ஒன்னும் சொல்ற மாதிரி இல்லங்க. ராணுவமே ட்ரக்(drug) கொடுக்கறாங்க" "ட்ரக்கா"
"ஓமங்க.. கஞ்சா, மக்கள பயன்படுத்த வெச்சு சமுதாயத்த நாசப்படுத்தி, சீரழிஞ்சு போகட்டும்மென கவர்ன்மென்ட்டே இதை பண்ணறாங்க. அப்ப எல்லாம் ஒழுக்கமா , ஒரு கட்டுக்கோப்போடு நல்லா இருந்தாங்க" எங்கயோ இதைப்பற்றி இவர் கூறியதுபோல் படித்த ஞாபகம் இருந்தது. நம்மூரின் டாஸ்மாக்கின் சரித்திர விற்பனையும் ஒரு கணம் வந்து சென்றது.
"இலங்கை அமைச்சர் சொன்னது போல இப்ப யாரவது வழி நடத்த வாய்ப்பு இருக்குங்களா?"
"இனிமேல் அந்தமாதிரி ஒரு வாய்ப்பே வராதுங்க, பிரபாகரன் மாதிரி இன்னொருவர் கண்டிப்பாக வர முடியாது. அப்ப எம்ஜிஆர் உதவி பண்ணாங்க, ஆரம்பத்துல இந்தியாவும் பயிற்சி கொடுத்தாங்க. இனிமேல் எந்தநாடும் உதவி பண்ணமாட்டாங்க. இங்கிலாந்தும் சேர்ந்து எல்லா நாட்டோட ஆதரவோடதான அழிச்சாங்க, அப்புறம் எப்படி..." பட படவென கூறிமுடித்தவரிடம் கணத்த அமைதி. என்ன சொல்வதென தெரிவில்லை. பத்து வருடம் கழிந்திருந்தாலும் அந்த அமைதியின் வலி என்ன என்னவோ யோசிக்க வைத்தது. அவரே தொடரட்டும் என காத்திருந்தேன்.
தொடர்ந்தவரின் கடைசி வாக்கியம் பலமாக யோசிக்க வைத்தது. "தனியா ஒரு நாடு இருந்த, தமிழ்நாடும் சேர்ந்து கூட ஆட ஆரம்பிச்சிடுவாங்க என திட்டம்போட்டு பண்ணிட்டாங்க" உண்மையாகவும் இருக்கலாம். கற்பனையிலேயே கலக்கலாக இருந்தது.
#பயணங்கள்
Sunday, July 02, 2017
தொலைந்துபோன பட்டிமன்றமும், அறச்சலூர் திருவிழாவும்
10*4 நிமிடம் = 1/2 லி கோக்
"சாரி ஸார், கொஞ்சம் மிஸ்டேக் ஆகிருச்சு, வேற பிரெட் போட்டுட்டாங்க , இன்னும் ஒரு பத்து நிமிடம் ஆகும்". "ஏற்கனவே 10 நிமிடம்னு சொல்லி 15 நிமிடம் வெயிட் பண்ணியாச்சு, மறுபடியும் ஒரு 10 நிமிடமா" என கேட்டேன்.
உடனே "சாரி சார், கோக் அரை லிட்டர் இலவசமா கொடுக்கிறோம்".
"அதெல்லாம் வேணாம். சீக்கிரம் பீஸாவ கொடுங்க" என்று அழுத்தமாக சொல்லிவிட்டு, எங்க மக்கள் துண்டு போட்டு பிடித்து வைத்திருந்த இடத்தில் அமர்ந்தேன். .
"Sorry, we don't drink coke",
"நோ சார், இட்ஸ் அவர் மிஸ்டேக் அண்ட் இட்ஸ் காம்ப்ளிமென்ட்ரி".
"பரவாயில்லை, நீங்க இலவசமா கொடுக்கறீங்க, இருந்தாலும் நாங்க குடிக்க மாட்டோம் ",
"நோ சார் இட்ஸ் ஃபிரி" என்று சொன்னதையே வேறு விதமாக சொல்லிக்கொண்டு இருந்தார்.
'அடேய், ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு முன்னாடி இருந்தே நாங்க கோக் குடிக்கமாட்டோம் டா' என்று சொல்ல நினைத்து "தட்ஸ் பைன். ப்ளீஸ் டேக் இட் பேக்" என்று முடித்தேன்.
-------------------------------------------------------------------------------------------------------------
மொடக்குறிச்சி கிருஷ்
2-Jun-2017
புத்தகங்களைப் பேசுவோம்
--------------------------------------------------------------------------------------------------------------
மொடக்குறிச்சி கிருஷ்
8-Jun-2017
வாழ்ந்தோம் வெள்ளிமலை எனும் கல்லூரியில்..
வாழ்ந்தோம் வெள்ளிமலை எனும் கல்லூரியில்
அந்நேர வராந்தா அரட்டைகள்..
பால்கனியிலிருந்து அடித்த 'சைட்கள்'....
பேசுவதற்கு பயப்பட்ட தாவணித் தோழிகள்...
அச்சத்துடன் வார்த்தைகள் சில பேசியதை
ஓட்டித்தள்ளிய சக மாமன், மச்சான், பங்காளிகள்...
வந்த வகுப்புகளின் தூக்கங்கள்...
அவர்களின் கேள்விக்கு முழித்த வேளைகள்...
அதற்கென வாங்கிய வசவுகள்..
ஆங்கிலம் பேச கட்டாயப்படுத்தியும்,
'yes , no' என சமாளித்து
தமிழில் பேசி 'பைன்' கட்டியது...
மோனோகுரோம் கணினிகள்...
இறுதியில் உண்ண இருக்கும் வடையை பிடுங்கித்தின்று
அந்த கணத்தில் எதிரியான நண்பன்..
அதற்காக முதலில் முடிக்கப்பட்ட வடைகள்...
கேலியும் கிண்டலுமான நடை..
கல்லூரி பிரிவில் செய்த, செய்ய வைத்த 'ராக்கிங்'...
திரைப்படங்களுக்காக 'ஸ்ட்ரைக்' நடந்த வெள்ளிகள்...
அதற்கு கூறப்பட்ட அகில உலக காரணங்கள்...
சேலைகளில் வலம் வரும் தேவதைகளுக்கான ஆண்டுவிழாக்கள்..
மொத்தமாக வாங்கிக்கட்டிக்கொண்ட 'வெல்கம் பார்ட்டி'கள்...
சில சின்ன சண்டைகள்..
பேசாமலிருந்த நாட்கள்..
இதில் விடப்பட்ட இன்னும் இன்னும்....
Thursday, May 25, 2017
நூலகம் - அகத்திலும், இணையத்திலும்
சித்திரை திருநாள் வாரம் சென்னையில் இருக்க நேர்ந்தது. ஞாயிறு மதியம் உணவு உண்ட பின், வழமையாக தூங்கி அ.
தொலைக்காட்சியுடன் பொழுதை கழிக்க விருப்பம் இல்லாமல், உண்ட களைப்புடன், மொபைலை நோண்டிக்கொண்டு இருந்தேன். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 'சுஜாதாவின் பன்முக ஆளுமை' என்ற தலைப்பில் பல எழுத்தாளர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என அறிந்து, உடன் இருந்த அக்காவின் மகனையும் இழுத்துக்கொண்டு வண்டியை விரட்டினேன். நேரடியாக அரங்கை தேடி நுழைந்து கேட்க ஆரம்பித்தோம். நல்லதொரு நிகழ்வு. சுஜாதா அவர்கள் பற்றி அறியாத தகவல்களையும் அறிய முடிந்தது. நிகழ்வின் இடையே தேநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது(வரலாறு முக்கியம்). நூலகத்திற்கு முதன் முறையாக சென்றிருந்தேன். நிகழ்வு முடிந்தவுடன் அப்படியே நூலகத்தை சுற்றி பார்வையிட்டோம். படிக்கப்படாமல் அலமாரியில் வைக்கப்பட்டுள்ள புதிய புத்தகம்போல், குளிர்சாதன வசதி செய்யப்பட்டும், மக்களால் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஒரு நூலகம். சில வாரங்களாக பொன் மாலைப்பொழுது என்ற நிகழ்வின் மூலம் பிரபல எழுத்தாளர்களின் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதையும் அறிந்து, 'சென்னையிலேயே வசித்து இருக்கலாமோ' என்ற ஏக்கம் ஒரு கணம் வந்து சென்றது. இது மட்டுமல்லாமல் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பு என நல்ல முயற்சிகள் திரு உதயச்சத்திரன் அவர்களால் எடுக்கப்பட்டு வருவது மகிழ்ச்சி. திருவான்மியூர் வழியாக திரும்புகையில், மாலை வெயிலில் கூட்டமாக இளைஞர்கள் கூட்டம் அள்ளியது சத்யம் வாசலில். 'சரி விடு, தியாஐராஜர் திரையரங்காக இருந்தபோது, ஞாயிறு மாலை நாமும் இங்கு தானே நின்றுகொண்டு இருந்தோம்'.
அதே வாரம், ஈரோடு சம்பத் நகர் நவீன நூலகத்தில் ஒரு நிகழ்வு. நண்பர் ஈரோடு கதிர் அவர்கள் உரையாற்றுவதை கேட்கவும், அவருடன் உரையாடவும் சென்றிருந்தேன். இங்கும் ஒரு நேர்த்தியான கருத்தரங்கு கூடம், பயிற்சி வகுப்புகளுக்கான அறை, பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தனித்தனி படிக்கும் அறைகள் மற்றும் கழிப்பறை வசதி என ஒரு 'மினி' அண்ணா நூலகத்தை கொண்டு இருந்தது. இங்கும் தேநீர் கொடுக்கப்ப்பட்டது(வரலாறு மீண்டும் முக்கியம்). இரண்டு நூலகத்தின் நிகழ்விலும் ஏறக்குறைய அரங்கு நிரம்பி இருந்தது(நானே நூலகம் செல்லும்போது, அரங்கு நிறையத்தானே செய்யும்) . "நல்ல வசதிகளுடன் உள்ளது இந்த நூலகத்தை, நாம் சிறப்பாக பயன்படுத்த வேண்டும்" என்று அப்போது கூறிய ஈரோடு கதிர் அவர்கள், கடந்த ஞாயிறு அன்று, ஈரோடு வாசல் குழுமத்தின் மலர்களை பேச அழைத்து 'புத்தகங்களைப் பேசுவோம்' என்ற தலைப்பில் நடத்தியது, அண்ணா நூலகத்தின் நிகழ்வு போல் ஆன ஒன்று. .
இந்த இரு நூலக வடிவமைப்பின் ஒற்றுமையை விட மேலும் ஆச்சர்யமூட்டிய ஒன்று. அண்ணா நூலகம் பற்றி சில தகவல்களை அறிய இணையத்தில் தேடும்பொழுது, வந்து விழுந்தவை 'பொன்மாலைப் பொழுதின் காணொளிகள்'(இதற்குத்தானே ஆசைப்பட்டாய் . இந்த காணொளிகள் காலைப்பொழுதையும் அதன் நடைபயிற்சியையும் 'கற்றலின் கேட்டல் நன்று' என இனிதாக்குகின்றன. படிக்க நேரம் கிடைக்காமல் அ. விருப்பம் இல்லாமல் இருப்பவர்களுக்கு இந்த காணொளிகள் வரம்.
அதிலிருந்து எனது செவிக்கு உணவிட்ட சித்த மருத்துவர் கு.சிவராமன் அவர்களுடனான வயிற்றின் உணவைப்பற்றிய கலந்துரையாடல் இங்கே.
https://www.youtube.com/watch?v=yGJ4xCbYDfg&t=5643s
நடத்துனர் என்னும் மகான்...
நீந்த ஆரம்பித்த நடத்துனர் மகான் இவர்களுக்கு இடையே நெளிந்து சென்று டிக்கெட் கொடுத்துக்கொண்டே செல்கிறார். தெய்வ லெவல். அவருக்கு இந்த வாடை பழகி இருக்குமோ?
கேட் போடறாங்களே என்று வடிவேல் மொழியோடு, ஊர் நெருங்கியதை எப்படி தெரிந்து கொள்வது என நொந்து கொண்டு, மொபைலை நோண்ட ஆரம்பித்தேன்.
Wednesday, April 26, 2017
அன்னதானம்?
* அடுத்தது, plastic டம்ளர் மற்றும் தட்டுகளில் சாப்பிட்டுவிட்டு, through ball மற்றும் flying disk விளையாடிவிட்டு, சென்றுகொண்டு இருந்தார்கள்.
* அடுத்தது, இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.
அறம் செய விரும்பு ....அதில் .....நன்மை கடைபிடி !!!
தாய்மொழி பயிலல்
------------------------------
செய்தி : “பிற மாநிலத்தவரும் தமிழ் படிக்க வேண்டும்!" முதல்வர்கள் கூட்டத்தில், பிரதமர் மோடி பேச்சு.
Sunday, April 09, 2017
நீரோடும் எங்கள் ஈரோடு
மாட்டு சாணத்தில் வாசல் மெழுகி
உறவினர்கள் ஒன்றாககூடி
வீட்டோடு திருமணம்.
தொப்புள் கொடி அறுபட
மூதாட்டி துணையோடு
மனையில் சுகமாக பிறந்த
மழழை...
ஊரார் ஊட்டி வளர்க்க
வளர்ந்து.
மேனிக்கு கடலைமாவு
தமக்கை முகம் பூசும் மஞ்சள்
தலைவார தேங்காய் எண்ணெய்.
என்று தூய்மை பேணி.
நம் பெயர் வெட்டிய சிறு போசியில் உண்ட உணவு.
எவ்விடத்திலும் அள்ளி பருகும் நீரும்
நோம்பி என்றால் மட்டுமே அதுவும் கட்டும் தாத்தா
நூல் சேலையில் கொசுவம் வைத்து கட்டும் பாட்டி
நோம்பிகளுக்கு மட்டுமே புடவை எடுக்கும் அம்மா
பள்ளிசெல்ல ஓட்டமும் நடையும்
வேலைக்கு போக ஒரு மிதிவண்டியும்
ஈரோடு டவுனுக்கு செல்ல சில டவுன் பஸ்களும்
தேடி இலை பறித்து
வைத்தியம் செய்யும் ஒரு பாட்டி
சுற்றம் சூழ குளிப்பாட்டி
பச்சையில் பாடை கட்டி
ஆவரஞ்செடிக்கு பால் ஊற்றி
பாட்டுப்பாடி
விடை அனுப்பப்பட்ட நம் தாத்தா...
குறள் 681
பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...
-
தமிழில் பங்குவணிகம் பங்குவணிகம் தொடர்பான தகவல்கள் மற்றும் குறிப்புகள் It is always easy to understand if we learn something in our mother-to...
-
சென்ற வாரத்தில் எங்களது ஊர் மொடக்குறிச்சி மீண்டும் தலைப்புச் செய்திகளில். சென்ற முறை 1996-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தல் நடந்த போது இருக்கும்...



